Wednesday 1st of May 2024 03:44:53 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.நகரின் கொரோனா நிலவரம் - ஆ.கேதீஸ்வரன்!

யாழ்.நகரின் கொரோனா நிலவரம் - ஆ.கேதீஸ்வரன்!


யாழ்.மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்றும் வெளியாகும். என கூறியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்,

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை திறக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருக்கின்றார்.

தற்போதைய நிலமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு விளக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 1வது தொகுதி பீ.சி.ஆர் முடிவுகள் இன்று வெளியானது.

அதில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2வது தொகுதி இன்று வெளியாகும். இதனடிப்படையில் தொற்று இனங்காணப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை முதல் திறக்கலாம்.

மேலும் திருமண மண்டபங்கள், திருமண நிகழ்வுகள். மரண சடங்குகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்தும் நீடிக்கும். மேலும் பாடசாலைகள் முன்னர் அறிவிக்கப்பட்டதைபோன்று 19ம் திகதியே ஆரம்பமாகும்.

என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE